search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுவாஞ்சேரியில் வியாரிபாரி வீட்டில் கொள்ளை"

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெளியூர் சென்றிருந்த வியாபாரியின் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி மோகன பிரியா நகரில் வசித்து வருபவர் அலாவுதீன் பிச்சை (வயது 52). வியாபாரி.

    வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லுக்கு சென்றிருந்தார். இன்று காலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் அலாவுதீன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் தடயத்தை பதிவு செய்தனர்.

    வியாபாரி வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
    ×